Monday, October 29, 2007

தீபா"வலி" - 1

இந்துக்கள் என்பவர்கள் கொண்டாடும் பண்டிகை களில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும் இந்து மத வழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக்கதை கற்பிக்கப்பட்டு இருப்பதை யாவரும் அறிவோம். அவ் வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக்கதையைச் சுருங்கக் கூறி முடித்து விட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளியிடுகின்றோம்.


இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றியுருக் கொண்டு வந்து இரண்யாட் சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப் பொழுது பன்றியுருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பினா ளாம். உடனே பன்றியும் பூமி தேவியும் திருமணம் செய்து கொண்டார்களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந் தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர்.


இவன் மாகிஷ் மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டிருந்தான். துவஷ்டாவின் பெண்ணாகிய சுசேரு என்பவளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறைபிடித்துக் கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசியரின் மனைவி யாகிய அதிதியென்பவளின் காரணியையும், வருணனு டைய குடையையும் கவர்ந்து கொண்டனனாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந் தானாம். இவ்வாறே இவன் அனேக ஆண்டுகள் வாழ்ந்து வந்தனனாம்.


இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் தேவர் களனைவரும் முறையிட் டதைக் கேட்ட திருமால், அவ னைக் கிருஷ்ணாவதாரத்தில் கொன்று விடுவதாக வாக் களித்திருந்தாராம். அதன் படியே, கிருஷ்ணன், ஒரு சம யத்தில் திருமாலின் அவதார மென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதார மென்று சொல்லப்படுகின்ற சந்தியபாமையென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தை அடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகாசுரன் இற க்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண் டாடும் படி செய்ய வேண்டு மென்று வேண்டிக் கொண்டா னாம். அவன் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்று சத்தியபாமையும் விரும்பி னாளாம். அதற்கறிகுறியாகத் தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இது தான் பாக வதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக இருக்க வேண்டுமென்பதைச் சிறிது ஆராயலாம்.


பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிந்தான் என்னும் கூற்று பொருந்துமா?
பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் ஒளிப்பது எப்படி?


பூமியெங்கிருக் கின்றது, கடல் எதன் மீது இருக் கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ?


பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண் ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை யன்றோ?


ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி, அப்பெண் ஒரு பன்றி யோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள் ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதை யையும் உண்மையென்று நம் புவோர் பகுத்தறிவுடையராக விருக்க முடியுமா?


இனிக் கடைசியாக நரகா சுரனைக் கொன்றதாகக் கூறப் படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்கும் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகைனக் கொலை புரிந்த கதைதான் தீபாவலி யென்று முடிக்கின்றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயா ரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு கொன்றானாம். பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்திய பாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமையைத்தான் பெருமையாகப் பேசுகின் றோம்! அந்தோ இதைவிட குறைந்த அறிவுடைய செயல் வேறென்ன விருக்கின்றது!


மேற்கூறிய உத்தமமான புராணக்கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணரலாம்.தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே கட்டுக் கதையாக முடிகின்றபோது தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை பொருந்தாத போலிக் கதையை - ஆதாரமாகக் கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண் டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?


சிலர் தீவாலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின் மூலம் நம்மையும் நமது வீடு வாசல் களையும் சுத்தஞ் செய்கின் றோம் என்கிறார்கள். எண் ணெய் தேய்த்து முழுகுவதும், புதிய ஆடையை உடுத்திக் கொள்வதும், சுகாதாரத்திற்கறி குறியாம். வாணங்களை வாங் கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்கொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணிய டைவதும் சுகாதாரமாம்! என்னே இவர்தம் அறியாமை?


நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்கால், ஏராளமான பொருளை வீண் செலவு செய் யும், பொருளற்ற மத சம்பந்த மான சடங்குகளில் ஒன்று தான் தீபாவலி என்றுதான் கூறு வோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்றதென் பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக் கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங் கும், புதிய ஆடைகளுக்காக - ஆடம்பரமான உடைகளுக் காக - அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக் கொடுக்கின்றோம். ஒரு பயனுமற்ற வெடிக்களுக் காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ! நமது இச்செய்கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூறமாட்டார்கள்?


இம்மட்டோ! இன்னும் இவ்வெடிகளால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காய வெடி செய்வதனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்தனை பேர்? கையிழக்கின்ற வர், காலிழக்கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடுவோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலியென்னும் பாழும் கடன்கார மதச்சடங் கன்றோ? மதச் சடங்கென்பதை விட மடச் சடங்கென்று கூறு வது பொருந்துமென்று நினைக் கின்றோம்.


இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங் களை யுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக் குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம் தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக் குச் சென்று பார்வையிடுவீர் களாயின் பலகாரப் பெரு மையையும் தீபாவலியின் மாண்பையும் உணரலாம்.


ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக் கொண்டிருப்ப தனால் - எவ்வளவு துன்ப முண்டாகின்றதென்பதை ஆராய்ந்து பாருங்கள்! இந்தத் தீபாவலிச் சடங்கினால், நமது பொருளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேத முண்டாகின்றதென்பதைச் சிறிது கூர்ந்து நோக்குவோமா யின் இதுபோன்ற சடங்கு களைக் கொண்டாட - மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல - முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகை யிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை - ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத்தீபாவலிப் பண் டிகையை - இந்தியாவின் செல் வத்தைக் கொள்ளையிடும் இத் தீபாவலிப் பண்டிகையை ஒழிப் பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறான மூடச் சடங்கு களையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில் தான் நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

(தீபாவலி என்பது அன்று பயன்படுத்திய சொல்லாட்சி)

சாமி சிதம்பரனார்
குடிஅரசு 14.10.1928

1 comment:

விஜயன் said...

தீபாவளியோ தீபாவலியோ என்ன கருமமோ.

சிவகாசியில் தீபாவளிப் பண்டிகை சமயங்களில்
எங்களுக்கு 700கோடி ரூபாய் தொழில்
விருத்திக்கு வழிவகுக்குறது.(சமீபத்திய நாளிதழ்)

எதற்கு எடுத்தாலும் உங்களுக்கு சிவகாசி வெடிவிபத்துன்னு
சொல்றதே வேலையாப் போச்சு.
இரு அதற்கு ஓரு தனிவலைப்பதிவு போடுறேன்.

தீபாவளியை நம்பி சுமார் பத்து படங்கள்
திரைக்கு வருகின்றன.(அது ஓரு
200கோடி முதலீடு)

தொல்லைக்காட்சியில் அதற்காக ஓரு 200கோடி
செலவழிக்கிறார்கள்.

தொழிலாளர்களுக்கு கொஞ்சம் தீபாவளி போனஸ்
கிடைப்பது தித்திப்பான விசயம்.

மிஸ்டர் பொதுசனம்
இந்த போனஸ் எல்லாவற்றையும்
காலி செய்து,
வட்டிக்கு மேல் கடன் வாங்கி
தீபாவளிக்கு அப்புறம்
தெருக்கோடியில்
சட்டி ஏந்துவது பலருக்கு தெரியாது.