Monday, June 29, 2009

தோன்றாத் தலைவன் தோன்றுவான்...!

வேலி போடலாம் உடலைச் சுட்டு சாம்பலை கடலில் கரைக்கலாம்..

கலங்கிப் புலம்பி இடம்பெயர் மக்களை வெருட்டிக் கயவர்கள் செய்தி பரப்பலாம்..

வலிய செய்கை கொண்டு சலிப்பினைத் தந்து தாயவள் கனவைக் கெடுக்கலாம்..

கூடிவரும் செய்கை இறுதியற்று போக நீண்ட கொடும் கரங்கள் எமை நசுக்கலாம்..

அயர்வு எமை முடக்கிக் கொல்லும் வகை எதிரி சூழ்ச்சி வலை பின்னலாம்..

உயர்வு தரும் ஊக்கம் வேண்டும் மக்காள்.. தளர்வு இன்றி போராடும் நீயும் புலியே..

மலரும் எங்கள் நாடு கண்டு வெல்லும் எங்கள் வேள்வி என்று..

புலரும் எங்கள் பொழுது காண.. இன்பப் பயனறிந்து அடிமை நோய்க்கு உன்கையால் மருந்துண்டு விடுதலைக்கு போராடு..

உள்ளத்தில் தெளிவு கொண்டு உலகத்தை அலசிப்பாரு.. வெள்ளத்தில் வந்து சேரும் சாக்கடைச் சகதிகளும்.. பள்ளத்தில் நிற்கும் பசிஅறு நீரைப் பாழாக்கிப் போகும்..

பக்குவம் கொண்டு பகுத்தறிவோடு விரிவாய்க் கேளு. மேத்தனப் பேசும் மெல்லிய கரை வேட்டிச் சரலும் மெல்லென தலை காட்டும்.. அள்ளியே உன் தலையில் கொள்ளிவைத்து குளிர் காணும்..

விடுதலை தன்னை பின்தள்ளிப் போட முதல் முறை சூழ்ச்சி செய்தது இந்தியர் ஆட்சி பல குழக்கள் அமைப்பு தமிழனத்தின் ஒற்றுமை சீர் குழைப்பு.. புரியாத குழுக்களின்

கெடுதலை தவிர்த்து வென்றது வேங்கை தன்மானம் நிறுத்தி..

அடிபட்ட சிங்கம் ஓய்வெடுத்து ஓதுங்கச் சில காலம் கொடுக்க வந்தது அமைதிப் படையாட்சி தலைவனைத் தீர்க்கத் திட்டமும் கொண்டு

சாதல் நோன்பை கையிலெடுத்தான் திலிபன்.. வாழ்தல் வேண்டி தமிழன் வாட

மோதல் ஒன்றே வழி என்று அகிம்சை பேசிய காந்தி நாட்டான் அரக்க குணம் கொண்டான்

வேற்றியை தேடி வெடித்த போரில் கற்றிட்ட பாடம் இன்னமும் நினைவில்..

பல்கலைக்கழக வளாகத் தரையும்.. யாழ் வைத்திய சாலையும் குருதியில் மூழ்க.

பொட்டிட்ட மங்கை பலர் பூவை இழநத்தும்.. கதறிக் கற்பை இழந்து மடிந்ததும்..

வற்றிய குளத்து மீன் குஞ்சுகளாக தொட்டில் கயிற்றுத் தூக்கில் பிஞ்சுகள் மடிய.. அந்நியர் வருகை அவமரியாதையோடு கப்பலில் போக.. மீண்டும் போர் மூண்டது சிங்களத்தோடு..

வங்க கடலில் பாய்ந்த வேங்கைப் படையின் விரிவு வானெங்கும் முட்ட விரித்தது சிறகை

மங்காப் புகழ் வீரம் தமிழன் கண்டான்.. உலகம் புரிய வியந்து வளர்ச்சி கொண்டான்..

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற ஈழம் தோன்ற வங்கம் பிரிந்து பல நாடுகள் தோன்றும் என்ற எண்ணம் வலுக்க.. வெளிப்படையாக இந்தியா வந்து சிங்கத்தின் பிடரி தடவிக் கொடுத்தான்.

சமபலம் கண்டு தமிழன் சிறக்க புலம் பல நாடுகள் கூட்டாயிணைந்து தமிழன் வீரம் அழித்திட வென்று பயங்கரவாத பெயரினைச் சொல்லி இனவழிப் பொன்றை செய்து முடித்தார்..

தானைத் தலைவன் தன்பலம் அறிந்து எதிரிப்படை வலிந்த போதும் துணிந்து நின்று போரினை கடந்து மௌனித்து நிற்கும் வீர வேரினை உன்னிடம் தந்தான்;..

பாரினில் மாற்றம் செய்திட வேண்டும்.. தமிழர் நிலை உலகில் வேற்றினம் அறிய செயல்பட வேண்டும்.. சோர்வும் தளர்வும் எதிரியை விடக் கொடிது..

மார்புக் கூட்டில் தமிழினத்தை நிறுத்து.. சார்புக் குழக்களை ஒரு அணியாய் திரட்டு

வேர்க்கு நீ அருமருந்தாகு.. வேதியர் மாவீரர் தர்மத்தை நிலைக்க தமிழனாய் நிமிரு.. நாடு கடந்தாலும் ஈழத்தை அமைத்து தேசிய தலைவன்; சிந்தனை வலுத்து உத்திர குமரன் எண்ணத்தை நிறுத்து..

தோன்றாத் தலைவன் தோன்றுவான் அவன்தான்.. தான் தோன்றீச்வரத்தாண்டவன் ஆகுவான்… ஐந்தீச்வரங்க்ள் ஆளும் வேதியன் தமிழர் குலக் காவலன்… மீண்டு வரத்தொண்டு உன்கையிலுண்டு…


மணிவண்ணன் ஏகாம்பரம்

நன்றி..http://www.nerudal.com/nerudal.8829.html