Monday, March 10, 2008

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள்! உங்களிடம் இருக்கிறதா அந்தத் துணிவும் துடிப்பும்?

இது நண்பர் ராஜ்குமாருடைய நீங்க திமிராவனாரா? என்ற பதிவுக்கு நீண்ட பின்னூட்டம்.

திமிரு என்பதோட நாகரீகமான சொல் வந்து "ஞானச்செறுக்கு". பாரதி, பெரியார் இவங்ககிட்ட இருந்தது அந்தச் செறுக்கு தான். பேசாப் பொருளைப் பேசத் துணிவது.

அது தான் "பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.. வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலமும் போச்சே"ன்னு பாரதியையும்,

"பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இந்தக் கடவுள்களுக்கெல்லாம் எத்தனை கோயில்கள்? எத்தனை வேளை பூசைகள்? எத்தனை கல்யாணங்கள்? இதெல்லாம் போதாதென்று தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு போகிறானே!

சென்ற ஆண்டு செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று யாராவது கேட்கிறார்களா? நாம் எல்லாம் முட்டாள்கள் என்பதால்தான் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். நம்மைவிடக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள். இந்த காலத்தில் நாம் சாமிக்குக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதா?

எங்களூரிலுள்ள ஒரு சாமிக்கு ஒன்றரை மூட்டை அரிசியைப் போட்டு ஒரு வேளைக்கு சமைத்துப் படைக்கிறார்கள். சாமியா தின்கிறது?" என்று பெரியாரையும் சொல்ல வைத்தது.

சமுதாயத்தின் அத்தனை ஓட்டைகளையும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கேள்வி கேட்டது ஞானச்செறுக்கு.

ஆனால் சமூகத்தில் நடக்கிற சில விஷயங்களை மட்டும் கண்டும் கண்டுக்காம, இன்னும் அந்த சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கெல்லாம் ஏதோ காரணம் இருக்கிறதுன்னு சொல்றதுக்கு பேர் கோழைத்தனம்.

பலரால் இன்னும் அந்த புனித பிம்பத்திலிருந்து வெளிய வர முடியவில்லை.

இதுக்கு பிறகு எல்லாரும், பாரதி மாதிரி ஒரு ஞானச் செறுக்கு கொள்ள முயற்சி செய்ததின் விளைவு தான் "ஜெயகாந்தன்" மாதிரி அரை குறைகள். நான் விரும்பிப் படித்த "இவன் தான் பாலா" புத்தகத்தில் ஒரு கல்லூரி விழாவில் "பாஞ்சாலி, பத்தினிக்கு பிறந்தவன் கண்களுக்கு பத்தினி, பரத்தைக்கு பிறந்தவனுக்கு பரத்தை"ன்னு சொன்னதை சிலாகித்து "என்ன ஆளுமை, என்ன ஞானச்செறுக்கு"ன்னு எழுதிருந்தது தான், அந்த புத்தகத்திலேயே காமெடியான பகுதி. சம்ஸ்கிருதம் தான் தேவபாடை.. நாய் பாஷை, நரி பாஷை எல்லாம், அம்பலம் ஏறக்கூடாதுன்னு சொன்ன போது "ஞானச் செறுக்கு" நல்லாவே வெளிப்பட்டது.

ராஜ்குமார், இன்னொரு காமெடி கட்டபொம்மன்.. இந்த சுட்டியில் சென்று பார்க்கவும். எது உண்மையின்னு தெரியலை. இருந்தாலும் சிவாஜி நடித்த கட்டபொம்மன் படம் நல்ல பொழுதுபோக்கு :-)

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள். உங்களிடம் இருக்கிறதா அந்த துணிவும் துடிப்பும்?

Sunday, March 9, 2008

நீங்க திமிராவனாரா?

நண்பர் பிரகாஷ்ராஜின் ("சொல்லாததும் உண்மை" புத்தகத்தின் மூலம் எனக்கு ரெம்ப நெருக்கமாயிட்டதால "நண்பர் பிரகாஷ்ராஜ்"ன்னு எழுதியிருக்கேன்) "சொல்லாததும் உண்மை" புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை "அவரை மாதிரியே நானும் திமிரானவன்"!

பொதுவா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு (நான்,நண்பர் பிரகாஷ்ராஜ்,நண்பர் வினு மாதிரி) யாராவது advice பண்ணி,நாங்க அதை கேக்கலைன்னா எங்களை "திமிர் பிடிச்சவன்னு" சொல்லுவாங்க.அது உண்மைதான்,நாங்க திமிர் பிடிச்சவங்கதான்!

ஆனா எங்களோட அந்த திமிரை, எங்களுக்கு advice பண்றவங்களை தாக்குற ஒரு ஆயுதமா நாங்க பயன்படுத்துறதில்லை,மாறா அவங்க அவங்களோட எண்ணங்களை,குழப்பங்களை,பயங்களை எங்க மேல திணிக்க முயற்சிக்கும் போது அதை தடுக்குற ஒரு கேடயமா பயன்படுத்துறோம்.

என்னை கேட்டா இந்த திமிர் எல்லாருக்கும் இருக்கனும்!

இப்படித்தான் ஒருத்தரு,மக்களுக்கு சிந்திக்கச் சொல்லிகொடுத்தாரு.மக்களும் சிந்திக்க ஆரம்பிச்சு,கேள்விகள் கேக்க ஆரம்பிச்சாங்க.இதை பாத்து கடுப்பான அந்த ஊர் அரசாங்கம் அவரை கூப்பிட்டு இதை எல்லாம் நிறுத்திருன்னு சொன்னது.

ஆனா அவர் ரெம்ப திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

(நாயகன் கமல் மாதிரி "அவங்களை நிறுத்த சொல்,நான் நிறுத்துறேன்" னு Dialague பேசியிருப்பாரோ? :) )

கடுப்பான அரசாங்கம் அவருக்கு "மரண தண்டனை" குடுத்துருச்சு.அப்பவும் "என்னை மன்னிச்சுடுங்கன்னு" ஒரு வார்த்தை சொல்லு,உன்னை விட்டுரோம்ன்னு சொன்னது.

அதுக்கு அவரு மறுபடியும் திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அவர் மட்டும் அன்னைக்கு திமிரா இல்லைன்னா,இன்னைக்கு நாம எல்லாருக்கும் "சாக்ரடீஸ்" ங்ற ஞானி கிடைச்சுருக்கமாட்டாரு.

நண்பர் பிரகாஷ்ராஜ் கூட "சினிமாவுல சம்பாதிச்ச பணத்தை சினிமாவுலேயே போடப் போறேன்னு" சொன்னப்ப.நிறைய பேரு வேண்டாம்ன்னு advice பண்ணினாங்க.அவர் மட்டும் திமிரா கேக்காம இருந்துருக்கலைன்னா, "அழகிய தீயே" "மொழி" மாதிரி நல்ல படங்கள் நமக்கு கிடைச்சுருக்காது.

இப்படி "பெரியார்,பாரதி,காந்தி,பகத்சிங்,கட்டபொம்மன்" ன்னு திமிர் பிடிச்சவங்க பட்டியல் ரெம்ப பெருசு.

இப்போ சொல்லுங்க "நீங்க திமிராவனாரா?"

Saturday, March 1, 2008

தமிழக தலைவர்களுக்கு பாரதியார் மேற்கொள்கள்(ஆத்திச்சூடி)

பாரதியார் இந்த மாதிரி மேற்கொள்கள் எழுதியிருக்கார் என்பது நான்
புத்தகத்தைப் பிரட்டினப்ப தான் தெரிஞ்சது.நான் தமிழில் கத்துக்குட்டி அதனால் தெரிஞ்சங்க உங்க மேலான கருத்துகளைப் பதிவு செய்ங்க நன்றி
.
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன் ப சிதம்பரம்(வரிச்சலுகை)
உடலினை உறுதி செய்
ஊண்மிக விரும்பு ??
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
ஒற்றுமை வலிமையாம் தா பாண்டியன்.(இடதுசாரி)
ஓய்தல் ஒழி
ஒளடதம் குறை

கற்றது ஓழுகு
காலம் அழியேல்
கிளைபல தாங்கேல் காங்கிரஸ்
கீழோர்க்கு அஞ்சேல் மு கருணாநிதி
குன்றேன நிமிர்ந்து நில்
கூடித் தொழில் செய் விஜயங்காந்த்
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்
கோல்கைக் கொண்டு வாழ் ???
கல்வியதை விடேல்

சரித்திர தேர்ச்சிகொள் ஸ்டாலின்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சுகொள்
சீறுவோர்ச் சீறு தயாநிதி மாறன்
சுமையினுக்கு இளைத்திடேல்
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய் எழுத்தாளார் ஞானி
சேர்க்கை அழியேல் ராமதாஸ்
சைகையில் பொருளுணுர்
சொல்வது தெளிந்து சொல் தலைவர் ரஜினிகாந்த்
சோதிடந்தனையிகழ் ???

செளரியம் தவறேல்

ஞமிலிபோல் வாழேல் ??

நன்று கருது
நாளேல்லாம் வினை செய் சுப்பிரமணிய சுவாமி
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்
நுனியளவு செல்
நூலினைப் பகுத்துணர் +2 மாணவர்களுக்கு
நெற்றி சுருக்கிடேல்
நேர்படப் பேசு
நையப் புடை ??
நொந்தது சாகும்
நோற்பது கைவிடேல்?

பணத்தினைப் பெருக்கு
பாட்டினில் அன்பு செய்
பிணத்தினைப் போற்றேல்
பீழைக்கு இடங்கொடேல்
புதியன விரும்பு வைகோ
பூமி இழந்திடேல்
பெரிதினும் பெரிதுகேள்
பேய்களுக்கு அஞ்சேல்
பொய்மை இகழ்
போர்த்தொழில் பழகு

மந்திரம் வலிமை
மானம் போற்று
மிடிமையில் அழிந்திடேல்
மீளுமாறு உணர்ந்துகொள்
முனையிலே முகத்து நில்
மூப்பினுக்கு இடங்கொடல்
மெல்லத் தெரிந்து சொல்
மேழி போற்று???
மொய்ம்புறத் தவஞ்செய்
மோனம் போற்று??
மெளட்டியந்தனைக் கொல்

நீங்களும் உங்க பங்குக்கு இந்த மேற்கொள்களுக்கு சேர்க்கலாம் !