Sunday, July 27, 2008

நெத்தியில கத்தை ரூபா..நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..!



நெத்தியில கத்தை ரூபா

கருக்கரிவாள் தீட்டி வச்சு
கருத்த தேகம் வாட்டி வச்சு
சூரியனே வேர்வையில
மூழ்கிப் போற அளவு... -- காட்டுல
பாடுபட்டும் வேட்டிமுனையில
முடிஞ்சதென்ன வரவு...
கல்லுடைச்சு மண் குழைச்சு
காத்தடிக்க சாரம் கட்டி
உசுரு ஊஞ்சலாட
உழைச்சு உழைச்சுப் பாத்தே -உன்னோட
உள்ளங்கையில் மிச்சமென்ன
ரேகைதான சேத்தே...
முப்பது நாள் வேலை செஞ்சு
மொதத் தேதி வாங்கினாக்கா
பாலு, மளிகை, மாத்திரைக்கே
பாதிக்குமேல் போச்சு -மத்த
செலவையெல்லாம் சமாளிச்சே
கடன்கார்டை தேச்சு...
ஓடு போல தேஞ்சு போயி
உக்காந்து டி.வி. பாத்தா... - ஒரு
ஓட்டு போட கோடி வாங்கி
காட்டுறானே கட்டு கட்டா...
நீயும் நானும் செத்துப் போனா
நெத்தியில ஒத்த ரூபா...
நம்ம ஜனநாயகம் செத்துப் போச்சே - அது
நெத்திக்குத்தான் இந்த கத்தை ரூபா...

- ஆரா

நன்றி ஆனந்த விகடன்...

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..
வாழ்க ஜனநாயகம்

பண முதலைகளின் ... கழுவறதுக்கு
நாலைந்து பசு மாடு மேய்ச்சுட்டுப் பிழைக்கலாம்.!

இந்த பிழைப்புக்கு Harvard,Oxford, பட்டங்கள் எதுக்கு?
கோடி கொடுத்து ஆட்சி பண்றதுக்கு
தெருக்கோடியில் பிச்சை எடுத்து வாழலாம்..

வெட்கக் கேடு த்தூ..