Tuesday, October 30, 2007

முன் பனியா? முதல் மழையா?

போன வாரம் தூக்கம் வராத ஒரு ஞாயிறு காலைப் பொழுதில் (8 மணி!) வீட்டுக்கு வெளியே நடுங்கிக் கொண்டே சுட்டது.




தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன். நிலமே.. பொறு நிலமே.. உன் பொறுமை வென்று விடுவேன்..




பனி விழும் இரவு, நனைந்தது நிலவு




விழாமலே இருக்க முடியுமா?




எங்கே செல்லும் இந்தப் பாதை?




பனிக்காற்றே பனிக்காற்றே... பரவசமா... பரவசமா?




நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா...



Monday, October 29, 2007

இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் என்ன?

கொஞ்ச நாளா எங்க பாத்தாலும், "இந்துக்கள் மனதைப் புண்படுத்தி விட்டார், பண்படுத்தி விட்டார்"ன்னு ஒரே இரைச்சல்.

அதுவும், தினமலர், துக்ளக் போன்ற அதிமேதாவிப் பத்திரிக்கைகளும், டெகல்கா புகழ் பி.ஜே.பி, ஒரு ஓட்டு சுப்பிரமணியம் சாமி இவங்க இரவு பாதியில் முழித்தால் கூட இதைச் சொல்லித் தான் அலறுகிறார்கள்.

(கொசுறு செய்தி: ஒரு ஓட்டு சுப்பிரமணியம் சாமி என்று அந்தக் கோமாளிக்கு பட்டம் கொடுத்தது நம்ம வெற்றி கொண்டான். "அவன் செத்தா, அவனே எந்திரிச்சி அழுதுட்டு, அப்புறம் அவனே போய் படுத்துக்கணும்" என்று கவுண்டமணி ஸ்டைலில் சு.சாமியை ஒரு பொதுக் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்)


எனக்கும் ரொம்ப நாளா ஒரு கேள்வி இருந்துட்டே இருந்தது. "இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் தான் என்ன?" நிறைய பேரிடம் கேட்டு விட்டேன். தெளிவான பதில் இல்லை.


சமீபத்தில் ஒரு வலைப்பதிவை படிக்கும் போது, ஒரு நண்பர், "நீங்கள் ராமர் பாலத்தை நம்புகிறீர்கள். அது ராமர் கட்டியது இல்லை என்று சொல்லுவது, எங்கள் மனதை புண்படுத்துகிறது என்று சொல்கிறீர்கள். நான் ராமரையோ அவர் பாலம் கட்டியதாகவோ நம்புவதில்லை. ஆனால் நீங்கள் அந்த மணல் மேடு ராமர் கட்டியது என்று சொல்வது என் நம்பிக்கையை புண்படுத்துவதாகாதா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்........... இது எப்படி இருக்கு?


இருந்தாலும் இன்னும் கன்வின்ஸ் ஆகவில்லை. "இந்துக்கள் மனதைப் புண்படுத்துவது என்றால் தான் என்ன?" தெரிந்தவர்கள் சொல்லவும்.

தீபா"வலி" - 1

இந்துக்கள் என்பவர்கள் கொண்டாடும் பண்டிகை களில் தீபாவலிப் பண்டிகையும் ஒன்றாகும். இதுவும் இந்து மத வழக்கத்தில் ஒன்றாகும். ஒவ்வொரு பண்டிகைக்கும், ஒவ்வொரு புராணக்கதை கற்பிக்கப்பட்டு இருப்பதை யாவரும் அறிவோம். அவ் வாறே தீபாவலிக்கும் ஒரு புராணக்கதையைச் சுருங்கக் கூறி முடித்து விட்டு அதன் பின்னர் நமது எண்ணத்தை வெளியிடுகின்றோம்.


இரண்யாட்சதன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிந்து கொண்ட பொழுது, திருமால் பன்றியுருக் கொண்டு வந்து இரண்யாட் சதனைக் கொன்று பூமியை நிலைக்கச் செய்தாராம். அப் பொழுது பன்றியுருவோடிருந்த திருமாலை, பூமி தேவி மணம் செய்து கொள்ள விரும்பினா ளாம். உடனே பன்றியும் பூமி தேவியும் திருமணம் செய்து கொண்டார்களாம். அவ்விரு வர்களுக்கும் ஒரு மகன் பிறந் தான். அவனுக்கு நரகாசுரன் என்று பெயர்.


இவன் மாகிஷ் மதி என்னும் பட்டணத்தை அரசாண்டு கொண்டிருந்தான். துவஷ்டாவின் பெண்ணாகிய சுசேரு என்பவளை இவன் ஒரு யானை உருவத்துடன் சென்று சிறைபிடித்துக் கொண்டு வந்து மணம் செய்து கொண்டானாம். இவன் காசியரின் மனைவி யாகிய அதிதியென்பவளின் காரணியையும், வருணனு டைய குடையையும் கவர்ந்து கொண்டனனாம். அன்றியும் எப்பொழுதும் தேவர்களுக்குப் பெரும் இடையூறுகளைச் செய்து கொண்டேயிருந் தானாம். இவ்வாறே இவன் அனேக ஆண்டுகள் வாழ்ந்து வந்தனனாம்.


இந்நரகாசுரன் துன்பத்தைப் பொறுக்கமாட்டாமல் தேவர் களனைவரும் முறையிட் டதைக் கேட்ட திருமால், அவ னைக் கிருஷ்ணாவதாரத்தில் கொன்று விடுவதாக வாக் களித்திருந்தாராம். அதன் படியே, கிருஷ்ணன், ஒரு சம யத்தில் திருமாலின் அவதார மென்று சொல்லப்படுகின்ற தானும், பூமிதேவி அவதார மென்று சொல்லப்படுகின்ற சந்தியபாமையென்னும் தனது மனைவியும் சேர்ந்து நரகாசுர பட்டினத்தை அடைந்தார்கள். கண்ணன் நரகாசுரனுடன் எதிர்த்துச் சண்டை செய்து கொன்றான். நரகாசுரன் இற க்கும்போது தான் இறந்த நாளை உலகத்தார் கொண் டாடும் படி செய்ய வேண்டு மென்று வேண்டிக் கொண்டா னாம். அவன் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டுமென்று சத்தியபாமையும் விரும்பி னாளாம். அதற்கறிகுறியாகத் தான் தீபாவலிப் பண்டிகை ஏற்பட்டதாம். இது தான் பாக வதம் முதலிய புராணங்கள் வழங்கும் கதையாகும்.இனி இக்கதை எவ்வளவு தூரம் உண்மையாக இருக்க வேண்டுமென்பதைச் சிறிது ஆராயலாம்.


பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிந்தான் என்னும் கூற்று பொருந்துமா?
பூமி உருண்டை வடிவமா? தட்டை வடிவமா? பூமியைப் பாயாக சுருட்டிக் கடலில் ஒளிப்பது எப்படி?


பூமியெங்கிருக் கின்றது, கடல் எதன் மீது இருக் கின்றது? என்ற கேள்விகளைக் கேட்போமாயின், திருமாலின் பன்றியவதாரத்திற்கே ஆபத்து வந்து விடுகின்றதன்றோ?


பிறகு பூமிதேவி பன்றியைக் கண்டு ஆசைப்பட்டாள் என்று கூறுவதனால் பூமி என்பது ஒரு பெண்ணுருவமா? ஒரு பெண் ணின் மேலா நாம் இவ்வளவு காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றோம்? என்ற கேள்விகளுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை யன்றோ?


ஒரு இயற்கைப் பொருளைப் பெண்ணாக ஆக்கி, அப்பெண் ஒரு பன்றி யோடு சேர்ந்து பெரும் புகழ் வாய்ந்த ஒரு பிள் ளையைப் பெற்றதாகக் கூறப்படும் கதை யையும் உண்மையென்று நம் புவோர் பகுத்தறிவுடையராக விருக்க முடியுமா?


இனிக் கடைசியாக நரகா சுரனைக் கொன்றதாகக் கூறப் படும் கண்ணனைப் பற்றிச் சிறிது நினைத்துப் பார்ப்போம். திருமாலவதாரமென்று சொல்லப்படுகின்ற கண்ணன் நரகாசுரனுக்கும் தந்தையாக வேண்டுமன்றோ? ஆகவே தகப்பன் மகைனக் கொலை புரிந்த கதைதான் தீபாவலி யென்று முடிக்கின்றதன்றோ? தகப்பன் தான் மட்டுஞ் சென்று மகனைக் கொல்லாமல் தாயா ரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு கொன்றானாம். பூமி தேவியின் அவதாரமென்று சொல்லப்படுகின்ற சத்திய பாமை நரகாசுரனுக்கு தாயன்றோ? மகனைக் கொன்ற கண்ணன் பெருமையைத்தான் பெருமையாகப் பேசுகின் றோம்! அந்தோ இதைவிட குறைந்த அறிவுடைய செயல் வேறென்ன விருக்கின்றது!


மேற்கூறிய உத்தமமான புராணக்கதையினால், நமது பரிசுத்தமான தீபாவலிப் பண்டிகையின் பெருமையை நீங்களே ஊகித்து உண்மையை உணரலாம்.தீபாவலிப் பண்டிகைக்காக வழங்கி வரும் கதையே கட்டுக் கதையாக முடிகின்றபோது தீபாவலியை எப்படி நமக்குரிய பண்டிகையென்று கொள்ள முடியும்? இத்தகைய மூடக் கதையை பொருந்தாத போலிக் கதையை - ஆதாரமாகக் கொண்ட தீபாவலியை வீண் செலவு செய்து ஏன் கொண் டாட வேண்டுமென்றுதான் கேட்கின்றோம்?


சிலர் தீவாலிப் பண்டிகை மழைக் காலத்தில் வருவதால் அன்று சுகாதார முறையைக் கைக்கொள்வதற்குப் பதிலாக இப்பண்டிகையின் மூலம் நம்மையும் நமது வீடு வாசல் களையும் சுத்தஞ் செய்கின் றோம் என்கிறார்கள். எண் ணெய் தேய்த்து முழுகுவதும், புதிய ஆடையை உடுத்திக் கொள்வதும், சுகாதாரத்திற்கறி குறியாம். வாணங்களை வாங் கிக் கொளுத்திக் கெட்ட காற்றை உட்கொள்வதும் சுகாதாரமாம். எண்ணெய்ப் பண்டங்களை உண்டு பிணிய டைவதும் சுகாதாரமாம்! என்னே இவர்தம் அறியாமை?


நாம் தீபாவலியைப் பற்றிக் கூறுங்கால், ஏராளமான பொருளை வீண் செலவு செய் யும், பொருளற்ற மத சம்பந்த மான சடங்குகளில் ஒன்று தான் தீபாவலி என்றுதான் கூறு வோம். தீபாவலியன்று நமது இந்தியாவில் எவ்வளவு பொருள் வீணாகின்றதென் பதைக் கணக்கிடுவோமாயின் கோடிக் கணக்கான பொருள் வீணாகின்றதென்பது விளங் கும், புதிய ஆடைகளுக்காக - ஆடம்பரமான உடைகளுக் காக - அந்நிய நாட்டினர்க்கு அளவு கடந்த பொருளை அள்ளிக் கொடுக்கின்றோம். ஒரு பயனுமற்ற வெடிக்களுக் காக எத்தனை லட்சம் ரூபாய் அள்ளி இறைக்கின்றோம். காசைக் கரியாக்காதே வாணத்தை வாங்கிச் சுடு என்ற பரிகாசப் பழமொழி நம்மை ஏளனஞ் செய்வதற்கு எழுந்த பழமொழியன்றோ! நமது இச்செய்கையைக் கண்ட அந்நியர் எவர்தான் நகைக்க மாட்டார்கள்? எவர்தான் நம்மை அறிவிலிகள் என்று கூறமாட்டார்கள்?


இம்மட்டோ! இன்னும் இவ்வெடிகளால் உண்டாகும் ஆபத்துக்கள் எவ்வளவு? வெங்காய வெடி செய்வதனால் கண்ணிழக்கின்றவர்கள் எத்தனை பேர்? கையிழக்கின்ற வர், காலிழக்கின்றவர் எத்தனை பேர்? உயிர் விடுவோர் எத்தனை பேர்? மற்றும் வெடிக்கும் வெடிகளால் காயமடைவோர் எத்தனை பேர்? இதற்கெல்லாம் காரணம், தீபாவலியென்னும் பாழும் கடன்கார மதச்சடங் கன்றோ? மதச் சடங்கென்பதை விட மடச் சடங்கென்று கூறு வது பொருந்துமென்று நினைக் கின்றோம்.


இதுமட்டோ? மழை நாளில் எண்ணெய்ப் பண்டங் களை யுண்டு வயிற்று நோய் கொண்டோர் எத்தனை பேர்? விஷ பேதிக் குட்படுவோர் எத்தனை பேர்? சுரநோய் கொள்வோர் எத்தனை பேர்? இதற்கு வேறு உதாரணம் வேண்டாம் தீபாவலியன்று காலையில் ஆஸ்பத்திரிகளுக் குச் சென்று பார்வையிடுவீர் களாயின் பலகாரப் பெரு மையையும் தீபாவலியின் மாண்பையும் உணரலாம்.


ஆகவே, மதம் மதம் என்று சொல்லிக் கொண்டிருப்ப தனால் - எவ்வளவு துன்ப முண்டாகின்றதென்பதை ஆராய்ந்து பாருங்கள்! இந்தத் தீபாவலிச் சடங்கினால், நமது பொருளுக்கும், உடம்புக்கும், அறிவுக்கும், எவ்வளவு சேத முண்டாகின்றதென்பதைச் சிறிது கூர்ந்து நோக்குவோமா யின் இதுபோன்ற சடங்கு களைக் கொண்டாட - மத சம்பந்தமான சடங்கென்று சொல்ல - முன் வருவோமா? தமிழ் மக்களுக்குப் பல வகை யிலும் சேதம் விளைவிக்கின்ற இத்தீபாவலிப் பண்டிகையை - ஆரியப் புராணக்கதையில் ஏற்பட்ட இத்தீபாவலிப் பண் டிகையை - இந்தியாவின் செல் வத்தைக் கொள்ளையிடும் இத் தீபாவலிப் பண்டிகையை ஒழிப் பதற்கு வழி தேடவேண்டும். இவ்வாறான மூடச் சடங்கு களையும், பண்டிகைகளையும், வழக்கங்களையும், ஒழிப்பதில் தான் நமது விடுதலை அடங்கிக் கிடக்கின்றது.

(தீபாவலி என்பது அன்று பயன்படுத்திய சொல்லாட்சி)

சாமி சிதம்பரனார்
குடிஅரசு 14.10.1928

Saturday, October 20, 2007

சூதாடிச் சித்தர் ஸ்ரீ ஸ்ரீ சரவண விஜய அடிகளாரின் கேள்விகளுக்கு பதில்கள்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும்---------------------
முதலில் நான் நாத்திகனும் அல்லஆத்திகனும் அல்ல.பெரியார் வழியும் இல்லை.பார்ப்பனர்கள் அடிவருடியும் இல்லை.பெரியார் மேல் தனிப்பட்ட அபிப்ராயம் உண்டு.பகுத்தறிவு பகலவன்,தாழ்ததப்பட்டோர் இட ஓதுக்கீடு,நிறைய சொல்லாம்.
அர்த்தமற்ற விழாக்கள்/விசயங்கள் ஆயிரம் உண்டு. சரஸ்வதி பூஜை அந்த வகையில் சேர்ந்ததா என்று தெரியவில்லை.ஆனால் அதனால்

1.உழைப்பாளிகளுக்கு,பொறி,சுண்டல்,பழம்,பூ போன்ற வியாபரிகளுக்கு நல்ல வரவு.ஓரு நாள் விடுமுறை,மக்கள் கூடுவதறக்கு/பழகுவதற்க்கு இதுஓரு வாய்ப்பு. அதனால் தொழில் பெருகுமே தவிரவளராது.


பதில்: எந்த பண்டிகையைப் பற்றிப் பேசினாலும், கடைசியில் எல்லோரும் முடிப்பது இது தான். "மக்கள் கூட ஒரு வாய்ப்பு, சிறு வியாபாரிகள் பயனடைவார்கள்".....

இதை ஒரு வகையில் ஒத்துக் கொண்டாலும், மேற்கு நாடுகளிலும் நிறைய விழாக்கள் கொண்டாடுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு நடப்பதைப் போல எந்த விழாக்களுக்கும் அடிப்படை காரணம் இல்லாமல் பார்த்ததில்லை. வருடத்தின் கோடை விடுமுறையில் அறிவியல் காட்சியகங்களுக்கு குழந்தைகளைப் கூட்டிப் போய், ஏரோப்பிளேன் எப்படி பறக்கிறது, டீசல் எஞ்சின் எப்படி இயங்குகிறது என்று கற்றுக் கொடுக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல் அந்த இயந்திரங்களின் Proto Type Toys வாங்கிக் கொடுத்து அதை இயக்க கற்றுக் கொடுக்கும் விதத்தையும் பார்த்திருக்கிறேன். நம்ம இந்தியத் திருநாட்டில் தான், Ford Ikon காரை கழுவி பொட்டு வைத்து, குடும்பமாய் நின்று சாமி (!) கும்பிட்டு, காருக்கு சூடம் காட்டி, பொறி, சுண்டல், பழம் படைக்கும் நல்ல பழக்கம் இருக்கிறது.

ஹன்றி போர்டு இருந்திருந்தால் ஆனந்தக் கண்ணீர் விட்டிருப்பார்... அவர் கூட அந்த காரின் முன்னால் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி இருக்க மாட்டார்... விவேக் சொன்னது தான் நியாபகத்திற்கு வருது... ஜப்பான்காரன் கஷ்டப்பட்டு லான்சர் காரை கண்டுபிடிச்சா நம்ம ஆள் அதுக்கு முன்னால தேங்கா சுத்தறான்.

பார்க்கும் குழந்தைக்கு என்ன தோன்றும்? பிற்காலத்தில் அதன் அறிவுக் கூர்மை எந்த இடத்தில் இருக்கும்? (ரைட் சகோதரர்கள், போர்டு, எந்த நாட்டில் பிறந்தார்கள் என்றும், மின்னலே விவேக் லாரி காமெடியையும் கொஞ்சம் நினைத்துப் பார்த்துக்
கொள்க.)


2.சரஸ்வதி பூசையின் உள் அர்த்தம் அந்த நாளில் தொழில் தொடங்கினால்நல்லது என்பார்கள். கிராமங்களில் சில நாட்கள் பார்த்துதான் விதை விதைப்பார்கள்.(நானே பார்த்து இருக்கேன்.)ஏன் எல்லா நாளும் விதை விதைக்காதா?அது போல் ஆயுதபூசையும் நல்லநாள் பார்த்துதான்வைப்பார்கள்.! (மற்ற மதவிழாக்களும் இதை ஓட்டியே வரும்.ரம்ஜான்)


பதில்: "பருவத்தே பயிர் செய்" என்பது தமிழன் மொழி. விதை விதைப்பதை கோடை காலத்தில் செய்ய முடியாது. ஆடியில் தான் விதைக்க வேண்டும். இது அறிவு. அதில் ஜோசியம் பார்த்து, ராகு காலத்தைப் தவிர்த்து, சுபமுகூர்த்தத்தில் விதைப்பது முட்டாள்தனம்....

நம்மை விட வேளாண்மையில் சிறந்த நாடுகள் எல்லாம் இப்படி நாள் பார்த்து விதைப்பதில்லையே... அவர்கள் எதை தின்கிறார்கள்?


இன்னும் எளிமையாக செல்வது என்னவென்றால்நீ வீட்டில் பார்க்கும் நல்லநேரத்தை விட்டு வேறநாளில்திருமணம் பண்ணுவாயா? தம்பி இந்த வெட்டி பேச்சுல்லாம்சும்மகாட்சிக்கு...

பதில்: நான் ராகு காலத்தில் திருமணம் செய்தால் நீ கடவுள் நம்பிக்கையை விட்டு விடுகிறாயா? என்று அசட்டுத்தனமாக பதில் சொல்ல மாட்டேன். நான் M.E சேரும் போது ராகு காலத்தில் பீஸ் கட்டி தான் கல்லூரியில் சேர்ந்தேன்.. பல்கலைக்கழக ரேங்க் வாங்கவில்லையா? பணயம் வைத்தது அப்பா காசு :)) நான் இது வரை எனது புத்தகங்களை வைத்து பூஜை செய்ததில்லை என்பதை நினைவில் கொள்க.

எனக்கு மூன்றாம் வகுப்பு நடத்திய ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். நாத்திகர். அவருடைய திருமணம் முடிந்து பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும் போது முருகன் படத்தை கீழே போட்டு உடைத்து இடது காலை முதலில் எடுத்து வைத்து, ராகு காலத்தில் மனைவியை அழைத்து வந்தார். அருமையான இல்லறம். முத்தான ஒரு பையன். என் கூடத் தான் படித்தான். இப்போ பொறியியல் படித்து நல்ல வேலையில் இருக்கிறான். போன வருடம், அவன் திருமணம் சுயமரியாதை முறைப்படி தான் நடந்தது.

சரி இப்போது என் விடயத்துக்கு வருவோம். நான் வாய்ச் சவடால் விட விரும்பவில்லை. எனது திருமணத்திற்கு உனக்கு கட்டாயம் அழைப்பு உண்டு. வந்து பார்.


3.அடிப்படை கடவுள் இருக்கிறார இல்லையா என்பது தான்.சரஸ்வதி,சிவன்,தேவர்கள் போன்றவர்கள் உண்மையில் கிடையாது.வெறும் நம்பிக்கை.கடவுள் என்பது மனிதனின் அடுத்த பரிணாமம்.(இன்னும் அன்பே சிவம் பாணியில் சொல்வதனால் நீ நான் சிவம்)அதனால் தான் கிராமங்களில் சிறப்பாகவாழ்ந்த கருப்பசாமி,முனியசாமியை தெய்வங்களாக கருதி வணங்கி வந்தனர்.
உன்னை என்னை உருவாக்கிய சக்தி(கருவறை) தான் பெண்கடவுள்என்கிறார்கள்.! பெயர் என்பது நியாபகத்து எளிமையாக இருப்பதறக்காக!எடுத்துக்காட்டு 11-படிக்கும் போது 1+1 கற்று தருவார்கள்4படிக்கும் போது கேள்வி எழும் ஏன் 1வகுப்பில 1+1 சொல்லித்தர்றாங்க?10ல sin cos tan சொல்லி தருவாங்க..எ.கா 2அது மாதிரி சின்ன குழந்தைக்கு துணைக்கு பொம்மை கொடுக்கிற மாதிரி தான் பாமரர்களுக்கு கடவுள்/சரஸ்வதி/சிவன் என்கிற உருவம்.(சத்குரு ஜக்கி வாசுதேவ்)நாளடைவில் அந்த உருவத்தை வழிபடாமல் உருவமற்ற சக்தி வழிபாடுதான் உண்மையான கோட்பாடு.


பதில்: ஜக்கி வாசுதேவ் மாதிரியான கார்ப்பரேட் சாமிகள், தேன்ல பால் வடியற மாதிரி தான் பேசறாங்க.

இந்து மதத்தில் எந்தப் பிரிவும் நாங்கள் உருவமற்ற வழிபாட்டை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறோம்னு சொல்றாங்களா?

“ஒரு தாரம் தலையில் வைச்சு மறு தாரம் பக்கம் வைச்ச சிவனே சிவனே” என்ற நிலமையில் தான் பெண் கடவுள்களின் நிலை இருக்கிறது.

"உன்னை என்னை உருவாக்கிய சக்தி(கருவறை) தான் பெண்கடவுள் என்கிறார்கள்" என்றால் கையில் வேல் சூலாயுதமும், வைர ஒட்டியாணமும் எதற்கு? இதில் கருவறையில் நீச்ச பாசையில் மந்திரம் சொல்ல மாட்டோம் என்பதும், தலித் எல்லாம், கருப்புசாமியையும், முனிசாமியையும் கும்பிடு என்றும்…… பேசுகிற மொழியிலும், வணங்குகிற கடவுளிலும், அப்பர் க்ளாஸ், மிடில் கிளாஸ், க்ரீமி லேயர் வைத்ததிற்கு என்ன காரணம்? தகரடப்பாவிற்கு தங்கமுலாம் பூசப் பார்க்காதே.

1+1 படிக்காமல் Sin Cos Tan படிக்க முடியாது என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இதைத்தான் நாங்கள் "உள்ளது சிறத்தல்" என்று டார்வின் பரிமாண விதிப்படி சொல்கிறோம்.


4.நம்ம மனசு கேள்வி பதில்,எல்லா விசயங்களை விட கதைகள்/படங்கள் தான் எளிதில் பதியும் கனவில் படங்கள் தான் வரும்.அதனால் பல புருடா புராணங்கள் எழுதி வைத்தார்கள்.அதில் எது உண்மை பொய் என்று தெரியாது..இன்னும் பக்தி இலக்கியங்களில் காம/காதல் ரசம் தான் அதிகம்(கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம்)சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!


பதில்: ஒத்துக் கொண்டதற்கு நன்றி. நேரம் இருந்தால், மாற்றுக் கருத்தையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருந்தால் கீ.வீரமணி எழுதிய "அர்த்தமற்ற இந்துமதம்" மற்றும் "கீதையின் மறுபக்கம்" படித்துப் பார்க்கவும்.


5.இந்து மதப்படி சரஸ்வதி/கடவுள் சாதரண மேன்மையான மனிதர்கள்.!இதை சொன்ன(பெரியார்),திராவிட கட்சிகளின் மூத்த தலைவர் மகளுக்கு ஓத்த பெண்மணிகளையே கல்யாணம் பண்ணிக்கொண்டார் !காமம்/காதல் இயற்கையானது ! கடவுளும் நம்மளைமாதிரி தான்.அது இடத்தையும்/காலத்தையும் பொறுத்து சரி/தவறு.சரி பெரியார் ஆகட்டும்.திராவிட முன்னேற்ற கழகம்அ.இ.தி.மு.க.இன்னும் திராவிடர் கழகம் ஆகட்டும்அவர்கள் தலைவர் வீட்டில் எத்தனை பேர் உண்மையானதிராவிட கொள்கை கடைபிடிக்கிறார்கள்(10%?).சொல்..ஓரு நல்ல கருத்தை உன்னைச் சுற்றி உள்ளவர்களை மாற்ற முடியாதுஎனில் மற்றவருக்கு சொல்லி/உபதேசித்து என்ன பயன்?நம்ம புடுங்கிற ஆனி எல்லாமே தேவை இல்லாத ஆனிதான்.


பதில்: பெரியார் செய்தது மணமொத்த திருமணம். மணியம்மை விருப்பத்திற்கு வேறாக அவர் திருமணம் செய்யவில்லை. தவிர சிவன், சரஸ்வதியோடு ஒப்பிடுவதற்கு பெரியார் கடவுள் அல்ல.

அர்த்தமுள்ள இந்துமதம் எழுத கண்ணதாசனுக்கு என்ன தகுதி? அதே தகுதிதான் இந்து மதத்தை விமர்சிக்க பெரியாருக்கு உள்ள தகுதி.

காலத்தையும் இடத்தையும் பொறுத்து எல்லாம் சரி தவறு என்றால் எந்த நியாயத்தையும் அநியாயமாக்க முடியும். எந்த அநியாயத்தையும் நியாயமாக்க முடியும்.

திராவிட தலைவரின் துணைவிகளோ, வாரிசுகளோ, உறவினர்களோ இந்தக் கொள்கைகளை கடைபிடிப்பது இல்லை. உண்மை. அதுதான் பகுத்தறிவின் சுதந்திரம்.

இது மதம் போல (எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி கொல்வதைப் போல, குஜராத்தில் நடந்த மதக்கலவரங்களைப் போல, பத்வா விடும் பண்டாரம், பரதேசிகளைப் போல) முரட்டுத்தனமானது அல்ல.

“என்னுடைய சுதந்திரம் உன்னுடைய மூக்கு நுனிவரைதான்” என்பது தான் பகுத்தறிவு அளிக்கும் சுதந்திரம். அது தான் திராவிட இயக்கத்தினரின் குடும்பத்திற்கும் பொருந்தும். தவிர வெறுமனே சத்தி வழிபாடு நடத்தி விட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடிப்பது, தாயை பழிப்பது, விதவையைப் பார்த்தால் விலகி ஓடுவது, தீட்டுப் பட்ட பெண்களை வெளியே குடிவைப்பது என்பது எல்லாம் பக்திமான்களா? நாத்திகர்களா? என்று ஆராய்ந்து பார்.

நல்ல கருத்துக்களையெல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், நம்மைச் சுற்றி இருப்பவர்களைக் கூட மாற்ற முடியாது என்று பெரியாரும், அம்பேத்காரும் நினைத்து இருந்தால், மலம் அள்ளிக் கொண்டிருந்தவனும், துணி வெளுத்தவனும், முகச் சவரம் செய்தவனும் நாடாள முடியுமா? இல்ல BC கோட்டாவில நீ பொறியியல் படித்திருக்கத்தான் முடியுமா?


6.வெளிநாட்டில் அர்த்தமற்ற ஆயிரம் விழாக்கள் செலவீனங்கள் உண்டு,(அசிங்கமான படம் எது,எலி ஓட்டப்பந்தயம்) அதனால் அவர்களை இங்கே இழுப்பது நேரவிரயம்.


பதில்: உன்னுடைய உயரத்தை அளக்க வேண்டுமென்றால் கூட பக்கத்தில் இருக்கும் சுவர் தேவைப்படுகிறது. Benchmarking என்பது உலக நடைமுறை. நாம் செய்வது தவறு என்றால் திருத்திக் கொள்வதிலும், மற்றவர்களின் நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதிலும், தவறு இல்லை.

இதைத்தான் பெரியார், "மேலே ஆறு லோகங்களும், கீழே ஒரு லோகமும், முப்பத்து முக்கோடி தேவர்களையும் எண்ணி சொன்ன நமக்கு, எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை வெளிநாட்டுக்காரன் வந்து அளந்து சொல்ல வேண்டியிருக்கிறது" என்றார்.

பக்தி என்பது அறிவை மழுங்கடிக்காமலும், நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை தர வேண்டும்.


7.பேப்பர் தொட்டுக் கும்பிடுறது இது எல்லாம் பைத்தியக்காரத்தனம்.

பதில்: நன்றி.


8.வீணான வெட்டி பூசைகள்/சடங்குகள் விட்டு ஆய்தபூசை கொண்டாடலம்.

பதில்: வெட்டி பூஜையை விட்டு விட்டால் ஆயுத பூஜை கிடையாது கண்ணா.

Monday, October 15, 2007

சரஸ்வதி பூஜை அறிவுக்கு சிறிதும் ஒவ்வாததே - தந்தை பெரியார் விளக்கம்

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்தமற்ற பூஜை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி அதற்கு சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும் வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு நாம் அந்த சாமிக்கு பூசை செய்வதன் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே பார்ப்பனர் மட்டும் படித்து பெரிய படிப்பாளிகளாக ஆகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியாத மக்குகள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


முதலாவது சரஸ்வதியென்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.அதாவது சரஸ்வதி என்கிற பெண் பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு இந்த பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு அவளுடன் இன்பமனுபவிக்க அவளை அழைக்கையில் அவர் பிரம்மனைத் தகப்பன் என்று கருதி உடன்படாமல் பெண்மான் உருவெடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஓர் ஆண்மான் உருவெடுத்து தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவெடுத்து மானைக் கொல்லவும் பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப்பித்த செயலும், பிரம்மனுக்கு மனைவியாகச் சம்மதித்ததாகவும் சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது!


சரஸ்வதியின் உற்பவத்தைக் குறித்த மற்றொரு கதையின் படி, சரஸ்வதி பிரம்மாவுக்கு பேத்தி ஆகிறாள். அதாவது பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைப்பட்ட போது வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டு வைக்க, அக்குடத்திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகிறது. இதனால் பிரம்மனுக்கு சரஸ்வதி - மகன் வயிற்றுப் பேத்தி ஆகிறாள். எனவே, சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் பார்ப்பனர் புராணப்படியே மிக்க ஆபாசமும், ஒழுக்க ஈனமும் ஆனதாகும்.நிற்க,


இந்த யோக்கியதையுடைய அம்மாளை மக்கள் எதற்காக பூசை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதியான தெய்வமென்றும், வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு சரஸ்வதி பூஜையென்றும், ஆயுதபூஜையென்றும் ஒரு நாளை குறித்து வைத்துக் கொண்டு, அந்த நாளை விடுமுறையாக்கி, புத்தகங்களையும் ஆயுதங்களையும் அடுக்கி வைத்துப் பூஜை செய்கிறார்கள்.

இந்தப் பூஜையில் அரசன் தனது போர் ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள் தராசு, படிக்கல், மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழிலாளர்கள் தங்கள் தொழில் ஆயுதங்களையும் இயந்திரசாலைக்காரர்கள் இயந்திரங்களையும் மாணவர்கள் பாடபுத்தகங்களையும் குழந்தைகள் பொம்மைகளையும் தாசிகள் தங்கக் சேலை ரவிக்கைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளையும் உழவர்கள் மண்வெட்டி, ஏர் முதலிய உழவுக் கருவிகளையும் மற்றும் இது போன்ற ஒவ்வொருவரும் அவரவர் பிழைப்புக்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களையும் வைத்துப் பூஜை செய்கிறார்கள்.இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று, அதனால் வரக்கூடிய வரும்படிகளும் போய், பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பாகத்தைச் செலவு செய்து போதாவிடில் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட, இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கே இடமில்லாமல் இருக்கிறது.


ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த நம் நாட்டு அரசர்கள் கதி என்னவாயிற்று? ஆயுதத்தை வைத்துப் பூஜை செய்தே அறியாத வெள்ளையன் துப்பாக்கி முனைக்கு மண்டியிடவில்லையா?சரஸ்வதி பூஜை செய்யும் வியாபாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ; தப்பு நிறை நிறுத்தாமலோ குறை அளவு அளக்காமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?அது போலவே கைத்தொழில் செய்பவர்களும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலியவைகள் போட்டு விழுந்து விழுந்து கும்பிடுவார்களே தவிர ஒருவராவது நாணயமாய் நேர்மையாய் நடந்து கொள்கிறார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாகத் தொழில் கிடைக்கின்றது என்றாலும் சொல்வதற்கு இல்லாமல்தானே இருக்கிறார்கள்!அது போலவே புத்தகங்களையும் பென்சிலையும் கிழிந்த காகிதப் குப்பைகளையும் வைத்து சந்தப் பொட்டு இட்டு, பூஜை செய்கிறார்களே அல்லாமல் காலோ கையோ பட்டு விட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகிறார்களே அல்லாமல் நமது நாட்டுப் படித்த மக்கள் 100க்கு 5 பேர்களுக்குள்ளாகத்தானே இருந்து வருகின்றார்கள்.


இவ்வளவு ஆயுதபூஜை செய்தும் சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும் நமது அரசர்கள் கதி என்னவாயிற்று? நமது வியாபாரிகள் நிலை என்ன? எவ்வளவு பேர் நஷ்டமடைந்து வருகிறார்கள்! நமது தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் பிழைப்புக்காக வேறு நாட்டிற்குப் போகிறார்களே இதன் காரணமென்ன?நாம் செய்யும் பூஜைகளை சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்கவில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்துக்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்தம் இல்லையா? அல்லது சரஸ்வதி என்கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவைகளாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தானே இருக்க வேண்டும்.என்னைப் பொறுத்த வகையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது கருத்து.


வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கிற பேச்சோ கல்வி தெய்வம் என்ற எண்ணமோ அறவே இல்லை. அன்றியும் நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதி தெய்வமாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கும்பிட்டு வருகிறோம்! இருந்தாலும் நமக்குக் கல்வியில்லை!ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதை கழிக்கப் போனால் அந்த ஏட்டை (சரஸ்வதியை)க் கொண்டே மலம் துடைத்துங் கூட அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண் பெண்கள் படித்திருக்கிறார்கள். உண்மையில் சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால், பூஜை செய்பவர்களைத் தற்குறிக ளாகவும், மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும் கல்விமான்களாகவும் செய்யுமா என்பதையே சிந்தித்துப் பாருங்கள்.


யுத்த ஆயுதம், கைத்தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வத்தின் அம்சமாயிருக்குமானால் அதைப் பூஜை செய்யும் நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும், வியாபாரமற்றும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்குமா?சரஸ்வதியைக் கனவிலும் கருதாமல் சரஸ்வதி பூஜை செய்கிறவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.


இந்தப் பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின்றது பாருங்கள்!ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம்மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது, இதற்காக மக்கள் பணம் செலவு செய்வது; நேரச் செலவாவது; அறிவைப் பறி கொடுப்பது. பல லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம் குங்குமம் கற்பூரம் சாம்பிராணி கடலை பொரி சுண்டல் வடை மேளவாத்தியம் வாழைக் கம்பம் பார்ப்பானுக்கு தட்சணை சமாராதணை ஊர்விட்டு போக ரயில் சார்ஜ் ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகிறது என்பதை எண்ணிப் பாருங்கள். நாட்டின் செல்வமல்லவா? ஒரு வருடத்தில் இந்த ஒரு பூஜையில் இந்நாட் டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானமாகும் என்று கணக்குப் பார்த்தாலே மற்ற பண்டிகைகள், உற்சவங்கள், புண்ணிய தினங்கள், அர்த்தமற்ற சடங்குகள் இவைகள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? நாட்கள் என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை எவ்வளவு அதிகம் என்பது சுலபத்தில் விளங்கிவிடுமே! இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணரும் கணக்குப் பார்த்ததே இல்லையே!


(விடுதலை - 12-10-1969)

Saturday, October 13, 2007

எது நம்பிக்கை?

ராமன் பிறந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் நம்புகிறேன் என்று சொல் லுகின்றார்கள். இந்த நம்புகிறோம் என்பதை ஒத்துக் கொண்டால் நாளைக்கு ஒவ்வொருத்தனும் கிளம்பி வந்துவிடுவார்கள். நேராக கலெக்டர் ஆபிசுக்குப் போய் எங்கள் தாத்தா கனவில் வந்தார். இது எங்கள் தாத்தா சொத்து என்று சொன்னால். அதனாலே கலெக்டரை அங்கிருந்து வெளியேற்றி விட முடியுமா? அதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டால் சொல்ல முடியுமா?


நம்பிக்கை என்று இப்படி கேள்வி கேட்டால் உச்சநீதிமன்றத்திலும் உச்சிகுடுமிகள் உட்கார்ந்திருப்பதினாலே அவர்கள் என்ன சொல்லுகின்றார்கள்? நம்பிக்கையை விடக்கூடாது என்று சொல் லுகின்றார்கள். இந்த அறிவியல் காலத்தில் நம்பிக்கையை ஏற்கவேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நாளைக்கு உச்சநீதிமன்றம் இருந்த இடம் எங்களுடைய சொத்து இது, எங்கள் நம்பிக்கை என்று சொன்னால் நீதிபதி வெளியே எழுந்து போய்விடுவாரா? அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பார் அல்லவா? இல்லிங்க, இது எங்களுடைய நம்பிக்கைங்க. அதனால் நீங்கள் வெளியே வந்துவிடுங்கள். நாங்கள் புதிதாக இங்கு ஒரு கோயில் கட்டப் போகிறோம். நீங்கள் எல்லாம் இங்கே இருக்காதீர்கள் என்று சொன்னால், நீதிபதி சம்மதிப்பாரா?எனவே பக்தி என்பதை வைத்துத்தான் மக்களை ஏமாற்றுகிறார்கள்.


மத நம்பிக்கைகள் எனக் கருதப்பட்ட பலவற்றையும் உடைத்ததாலேயே மனிதர்கள் பல நேரங்களில் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்பது அத்வானிகளுக்குத் தெரியுமா? உதாரணமாக, சதி என்ற உடன்கட்டை ஏறுதல் என்பது ஒரு காலத்தில் இந்து மத நம்பிக்கை தான். அதனைத் தகர்த்ததால் தான் இன்று கைம்பெண்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.


அந்த நம்பிக்கையை இன்றும் காப்பாற்றியிருந்தால், கடந்த கால ஆண்டுகளுக்கு முன்னால் உயிரிழந்த பா.ஜ.க.வின் பிமோத்மகாஜன் மனைவி இன்று உயிரோடு இருந்திருக்க முடியுமா? சதி என்ற உடன் கட்டை ஏறும் இந்து மத நம்பிக்கையை இன்று வலியுறுத்தி இந்துத்துவத்தை தூக்கி நிறுத்தி ஓட்டு கேட்க அத்வானிகள் தயாரா?

இராமாயணம் பற்றி அறிஞர்கள்

ஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.(சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.(பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்டமலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).


நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 228).



ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.(ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).



இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.(பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)



மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)




இராமாயணமும், மகாபாரதமும் இந்தோஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 7677).



இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)



ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த பெரிய பிளவு ஏற்பட்டது.(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).



இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.(திரு. நீலகண்ட சாஸ்திரி).இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.(சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர் 1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).


இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை கண்ணன் கதை கந்தன் கதை விநாயகன் கதை காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.(மறைமலையடிகள் அறிவுரைக் கொத்து)ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.(மறைமலையடிகள் வேளாளர் நாகரிகம் பக்கம் 61).



ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.(மறைமலையடிகள் கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பக்கம் 3334.)


இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.(திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில் மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)



புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.(வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)



இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய இராவணப் பெரியார் பக்கம் 78).



மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.(ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.(வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).



புராணங்களும் இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.(திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் வரலாறும் பக்கம் 8)

திராவிடர் ஆரியர் உண்மை

(திராவிடர் கழகம் வெளியிட்ட திராவிடர் ஆரியர் உண்மை என்ற புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.)


ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).


ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).


ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)


இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன. மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)


விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)


பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).


வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)


பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).


இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.
(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்14 ஆவது பக்கம்).


இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.
(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)


திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்)