Thursday, September 27, 2007

விவசாயிகளின் கடன்,பட்டினிச் சாவு சாய்நாத்.

பாலகும்மி சாய்நாத் Everybody Loves a Good Drought - Stories form India’s Poorest Districts
நண்பர் அனுப்பிய வலைத்தளத்தில் இருந்து இந்திய விவசாயிகளின் பட்டினிச்/கடன் சாவு பற்றி நம் அரசியல்வாதிகள் சிந்திப்பது இல்லை என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
http://icarusprakash.wordpress.com/2007/09/26/a-stinking-place-called-india/அதிலில் இருந்து சில பகுதிகள்.
“The Farm Crisis: Why have more than a lakh farmers ended their lives in India during the past decade” என்ற பொருளிலே, தி ஹிந்து நாளிதழின் ரூரல் எடிட்டரும், இந்த ஆண்டின் ( 2007 ) ரமோன் மக்சேசே விருது பெற்றவருமான பாலகும்மி சாய்நாத் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி, நேற்று இரவு 12 மணிக்கு , லோக்சபா டிவியிலே ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது
வறுமைத் தற்கொலைகள் அதிகமாகி, ஊடகங்களில் பரவலாகச் செய்தி வந்ததும், அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிடச் செல்ல, பிரதமர் எடுத்துக் கொண்ட காலம், இரண்டு மாதங்கள். அதே சமயம் பங்கு மார்கெட்டில் பிரச்சனை என்றதும் , நிலைமையைச் சீர் செய்ய அங்கே செல்ல நிதி அமைச்சர் எடுத்துக் கொண்ட நேரம், வெறும் அரை மணி நேரம். இந்திய ஜனத்தொகையில் , பங்குமார்க்கெட்டில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம் 1.8 %. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களின் சதவீதம், 40 சதவீதத்துக்கும் மேலே.


விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி சாய்நாத் எழுதி வந்த கட்டுரைகளை இங்கே படிக்கலாம். http://www.indiatogether.org/agriculture/suicides.htm


இந்த கருத்துக்களையும் உள்ளடக்கி, சாய்நாத், இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் ( சென்னை ) நடத்திய நிகழ்ச்சியில், When rising inequalities threaten democracy என்ற பொருளில் , சென்றவாரம் ஒரு உரை நிகழ்த்தினார். உரை, ஒலி வடிவத்தில் இங்கே கிடைக்கும். 46 எம்பி சொச்சம் இருக்கும் கோப்பை இறக்கிக் கேட்பது சிரமம் தான். இருந்தாலும் கேளுங்கள்.http://www.archive.org/download/BadriSeshadriP.Sainathon_India_WhenrisinginequalitiesthreatenDemocracy_/2007_09_19_Sainath.mp3


பெங்களுர் சுற்றியுள்ள கிராமத்தில் இரண்டு தடவை பயணித்திருக்கிறேன்.அதில் நான் நேரடியாகப் பார்த்தது.பெங்களுரில் பக்கத்தில் இப்படி என்றால் மற்ற கர்னாடக கிராமங்களை பற்றி என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.
1.ஓரு தடவை அலுவகத்தில் இருந்து புத்தகம் தருவதற்காக சுமார் 20மைல் தொலைவில் உள்ள 5பள்ளிக்குச் சென்று இருந்தோம்.அங்கு படிக்கும் மாணவர்களில் 70சதவிதத்திற்கும் மேல் 11,12 படிக்க மாட்டார்கள்.மதிய உணவு(ISKON) மற்றும் இலவசமாக நோட்புக் கொடுப்பதனால் தான் படிக்கவே வருகிறார்களாம். :-( .

2.40மைல் தொலைவில் இருந்த ஓரு அரசு பள்ளிக்கு படிக்கும் மாணவர்கள் பிச்சை எடுத்து படிப்பதாக கேள்விப்பட்டேன்.அவர்கள் தாயாரே பிச்சை எடுக்க அனுப்புகிறார்கள்

இரண்டு பகுதிகளும் விவசாயம் நம்பிவாழும் கிராமங்கள்.
கோடிகளில் புரளும் அரசியல்வாதிகளுக்குதெருக்கோடியில் வாழ்பவர்கள்தேர்தல் வரும்போது மட்டும்தான் தெரிவார்கள் ! !

No comments: