Wednesday, August 15, 2007

வெள்ளைப் புறா ரெண்டு

சமீபத்தில் லக்ஸம்பர்க் போயிருந்த போது, அப்படியே சித்ரா, ஜானகி குரலை எல்லாம் குழைச்சு, குழலூதும் கண்ணனுக்கு குயில்(கள்) பாடும் பாட்டு கேக்குதா.....ன்னு ரெண்டு குரல்.

மனதை வருடும் கித்தார் இசை வேற கூட, அப்படியே தேடித் தேடி ஒரு தெருமுனையில் போய் சேர்ந்தால், நிஜமாவே ரெண்டு குயில்கள்.





அப்படியே இசை மழை, அருவி மாதிரி பொழிந்தது.... அந்த கிட்டார் நானா இருக்க கூடாதான்னு கூட தோணிச்சு... கொஞ்ச நேரம் நனைஞ்சு வந்தேன்.

இசைக்கு ஏது மொழி? :-)

No comments: