Wednesday, August 15, 2007

ஏக் கெளமே ஏக் கிசான் ரெக்தா தா - நிறைவு

தொடர்ச்சி

காட்சி 3:

Brugge - Venice of Belgium......அப்படியே நதிக்கரை ஒரமா உக்காந்து "கறுப்பான கையாலெ என்ன புடிச்சான்" WalkMan ல கேட்டுட்டு இருந்தேன். நம்ம நண்பன் பக்கத்துல வந்து உக்காந்தான். என்ன அழகா River எல்லாம் Channalise பண்ணி, Plan பண்ணி, Transport பண்றாங்கன்னான். நம்ம ஆளுங்களும் தான் இருக்காங்களே?.





இந்த ரிவெர் Flanders இருந்து தானே இங்க வருது. நடுவர் மன்றம் இல்லையா?ன்னு கேட்டேன். ஒன் புத்தி ஏன் இப்படியே சிந்திக்குதுன்னு சிரிச்சான். அடிபட்ட சமுதாயம் அப்படி தான் இருக்கும்னு சொன்னேன். இந்தியாவில இருக்கிற உன்ன மாதிரி இங்க இருக்கவுங்க, எதுக்கெடுத்தாலும் கேள்வி கேக்கறது இல்லை, எல்லோரும் தேசிய ஒற்றுமையோட இருகாங்கன்னு சொன்னான்.

நான் தேசிய ஒற்றுமை எப்படி வரும்னு கேட்டேன்? எல்லோரும் ஒரு மொழி பேசி, ஒரு கலாச்சாரத்துல வாழ்ந்தா வரும்னான். கர்னாடகால எது தேசிய மொழி? இந்தி. ஆந்திரால? இந்தி. மகாராஸ்ட்ரால? இந்தி. மூணு மாநிலங்களுமே, மும் மொழித்திட்டத்தை ஏத்துக்கிட்டவுங்க. ஏன் அலமாட்டி பிரச்சனைல அடிச்சிகிறாங்க? சரி விடு, Hainaut -French மாநில மொழி, Flenders - Dutch மாநில மொழி. So Called தேசிய மொழி இங்க இல்லை. அப்படியும் பிரச்சனை இல்லை ஏன்?

தமிழ் நாட்டுக்காரங்க இப்படித்தான். எங்க போனாலும் எவன் கூடயும் சேர மாட்டாங்க, குதர்க்கமா கேள்வி கேப்பாங்கன்னான். நான் ஆத்துல ஒரு கல்லை தூக்கி வீசிட்டு Walk Man ஆன் பண்ணி மறுபடியும், "கறுப்பான கையால என்ன புடிச்சான்".... அட எங்கயோ கேட்ட மாதிரி இருக்குதே....நம்ம L.R. ஈஸ்வரி பாடினது... கற்பூர நாயகியே கனக வல்லி............


காட்சி 4:


என்னடா ஆர்குட் Profileல கம்யூனிசம்ன்னு போட்டிருக்க? எங்க தொழிற்சாலை ஆரம்பிச்சாலும், கைல சிவப்பு கொடியோட வந்து உக்கார வேண்டியது, சிறப்பு பொருளாதர மண்டலத்துக்கு நிலம் எடுக்க விட்றது இல்லை. ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், போனஸ், குறைந்தபட்ச கூலி, அது இதுன்னு அன்பே சிவம் கமல் மாதிரி பேசி, நாட்டுல ஒரு தொழில் தொடங்க விட்றது இல்லை. இதுக்கு பேர்தான் கம்யூனிஸமா? பேசி முடிச்சான்.

நான் தினத்தந்தி படிச்சிட்டிருந்தேன். டேய் மச்சி, கோயமுத்தூர் International Airportக்கு நிலம் எடுக்கறாங்களாம். கோல்டுவின்ஸ் எல்லாம் போகுதாம், உன் வீடு அங்க தானெ இருக்கு? அமைதியாவே கேட்டேன்.

அதுனால என்ன? நாட்டுக்கு தேவைன்னா தந்துட்டுப் போறது, இப்படி எல்லாருமெ, தரமாட்டேன்னு சொன்னா அரசாங்கம் எங்க தான் Airport கட்டும்?ன்னான்.

விஜயகாந்த்துக்கும் இது பொருந்தும்ல? இது நான். நீ பேசாமப் படின்னு சொல்லிட்டு, அவனோட மடிக்கணிணில மூழ்கீட்டான்.

கொஞ்ச நேரம் கழிச்சு, அவன் Screenஅ கொஞ்சம் எட்டிப் பாத்தேன். Google.com கீ வேர்ட்..Coimbatore New Airport Plan... வாழ்க Google!


காட்சி 5:


Tamil - A Classical Language - CNN IBN Liveல டாக்குமெண்டரி பாத்துட்டு இருந்தான். என்னடா? தமிழ் செம்மொழியாம்? இப்படி அறிவிச்சதுனால யாருக்கு லாபம்? தமிழ் செம்மொழியான எல்லா தமிழனுக்கும் சோறு கிடைச்சிருமா? வேலை கிடைச்சிருமா? எவனும் ரேஷன் க்யூவில நிக்க வேண்டாமா?ன்னு அறிவுப்பூர்வமா கேட்டான்.

அயோத்தில ராமர் கோயில் கட்டுனா இந்தியன் அத்தனை பேருக்கும் சோறு கிடைச்சிருமா?, காவிரி தண்ணி வந்துருமா?, இல்லை இந்தியை தேசிய மொழியா தமிழ் நாடு ஏத்துக்கிட்டாதான் எல்லாருக்கும் வேலை கிடைச்சிருமா? அவன் வழியிலே கேட்டேன்.

ராமர் பாலம் காக்க விஸ்வ இந்து பரிசத் தலைவர் போராட்டம்!, கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுப்பூர்வமான விஷயத்தில் விளையாட வேண்டாம், அரசுக்கு எச்சரிக்கை!....அடுத்த செய்தி.



இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்னு நான் எதையும் Conclude பண்ண விரும்பலை. விரும்பவும் கூடாது.

வேற்றுமையில் ஒற்றுமைன்னு சொல்றாங்க. சுதந்திரம் வாங்கி 60 வருசம் ஆச்சு. முக்கியமான விசயங்கள் எதுலையும் ஒற்றுமை இல்ல. எல்லாரும் எதுக்காகவோ அடிச்சிட்டு இருக்காங்க.

அதுக்காக சுதந்திரம் வேண்டாம், நாடும் வேண்டாம், எல்லாரும் தனித்தனியா போயிருவோம்னு சொல்லலை. முன்னால கருப்பனை வெள்ளைக்காரன் ஆண்டான். இப்பொ மொழியால நம்ம மேலயெ இன்னொருத்தர் ஏகாதிபத்தியம் செய்ய வேண்டாம்னு சொல்றேன். ஒற்றுமையா இருப்போம். அவரவர் சுயமரியாதையோட.

எல்லா விஷயத்தையும், Electronic Cityல இருந்தோ, Tidel Parkல இருந்தோ, Hitech Cityல இருந்தோ மட்டும் பாக்காதீங்க. இந்த நாட்டுல தான் 50 கோடி செலவுல கல்யாணம் பண்ற ஜோடியும் இருக்கு. ஆந்திராவுல, கத்தரிக்காய் விலை போகாம, தற்கொலை பண்ணிக்கிற சாதி சனமும் இருக்கு.

மத்தபடி, சுதந்திரம் மேல எந்த கோபமும் இல்லை. தமிழ் நாட்டில் ஏதோ குக்கிராமத்தில் பிறந்து, "பிறக்க ஒரு ஊர், பிழைக்க ஒரு ஊர்"ன்னு இன்னமும் அலைஞ்சிட்டிருந்தாலும், நினைத்ததெல்லாம் சொல்ல, பேச, எழுத, தாய் நாடு சுதந்திரம் கொடுத்திருக்கு. அதற்கு நன்றிகள். வாழ்க சுதந்திரம். வாழ்க ஒற்றுமை!

No comments: