Monday, March 10, 2008

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள்! உங்களிடம் இருக்கிறதா அந்தத் துணிவும் துடிப்பும்?

இது நண்பர் ராஜ்குமாருடைய நீங்க திமிராவனாரா? என்ற பதிவுக்கு நீண்ட பின்னூட்டம்.

திமிரு என்பதோட நாகரீகமான சொல் வந்து "ஞானச்செறுக்கு". பாரதி, பெரியார் இவங்ககிட்ட இருந்தது அந்தச் செறுக்கு தான். பேசாப் பொருளைப் பேசத் துணிவது.

அது தான் "பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே.. வெள்ளைப் பரங்கியனை துரையென்ற காலமும் போச்சே"ன்னு பாரதியையும்,

"பிறப்பு இறப்பு இல்லாதவன் கடவுள் என்ற பிறகு தாய் வயிற்றில் பிறந்தவன் கடவுள் ஆக முடியுமா? இந்தக் கடவுள்களுக்கெல்லாம் எத்தனை கோயில்கள்? எத்தனை வேளை பூசைகள்? எத்தனை கல்யாணங்கள்? இதெல்லாம் போதாதென்று தாசி வீட்டுக்கு வேறு தூக்கிக் கொண்டு போகிறானே!

சென்ற ஆண்டு செய்த கல்யாணம் என்ன ஆயிற்று என்று யாராவது கேட்கிறார்களா? நாம் எல்லாம் முட்டாள்கள் என்பதால்தான் இவற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். நம்மைவிடக் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களெல்லாம் முன்னேறி விட்டார்கள். இந்த காலத்தில் நாம் சாமிக்குக் கல்யாணம் செய்து கொண்டிருப்பதா?

எங்களூரிலுள்ள ஒரு சாமிக்கு ஒன்றரை மூட்டை அரிசியைப் போட்டு ஒரு வேளைக்கு சமைத்துப் படைக்கிறார்கள். சாமியா தின்கிறது?" என்று பெரியாரையும் சொல்ல வைத்தது.

சமுதாயத்தின் அத்தனை ஓட்டைகளையும் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் கேள்வி கேட்டது ஞானச்செறுக்கு.

ஆனால் சமூகத்தில் நடக்கிற சில விஷயங்களை மட்டும் கண்டும் கண்டுக்காம, இன்னும் அந்த சாஸ்திரம் சம்பிரதாயத்துக்கெல்லாம் ஏதோ காரணம் இருக்கிறதுன்னு சொல்றதுக்கு பேர் கோழைத்தனம்.

பலரால் இன்னும் அந்த புனித பிம்பத்திலிருந்து வெளிய வர முடியவில்லை.

இதுக்கு பிறகு எல்லாரும், பாரதி மாதிரி ஒரு ஞானச் செறுக்கு கொள்ள முயற்சி செய்ததின் விளைவு தான் "ஜெயகாந்தன்" மாதிரி அரை குறைகள். நான் விரும்பிப் படித்த "இவன் தான் பாலா" புத்தகத்தில் ஒரு கல்லூரி விழாவில் "பாஞ்சாலி, பத்தினிக்கு பிறந்தவன் கண்களுக்கு பத்தினி, பரத்தைக்கு பிறந்தவனுக்கு பரத்தை"ன்னு சொன்னதை சிலாகித்து "என்ன ஆளுமை, என்ன ஞானச்செறுக்கு"ன்னு எழுதிருந்தது தான், அந்த புத்தகத்திலேயே காமெடியான பகுதி. சம்ஸ்கிருதம் தான் தேவபாடை.. நாய் பாஷை, நரி பாஷை எல்லாம், அம்பலம் ஏறக்கூடாதுன்னு சொன்ன போது "ஞானச் செறுக்கு" நல்லாவே வெளிப்பட்டது.

ராஜ்குமார், இன்னொரு காமெடி கட்டபொம்மன்.. இந்த சுட்டியில் சென்று பார்க்கவும். எது உண்மையின்னு தெரியலை. இருந்தாலும் சிவாஜி நடித்த கட்டபொம்மன் படம் நல்ல பொழுதுபோக்கு :-)

பேசாப்பொருளைப் பேசத் துணியுங்கள். உங்களிடம் இருக்கிறதா அந்த துணிவும் துடிப்பும்?

1 comment:

வினு said...

மற்றுமொரு சுட்டி

http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_12.html