Sunday, March 9, 2008

நீங்க திமிராவனாரா?

நண்பர் பிரகாஷ்ராஜின் ("சொல்லாததும் உண்மை" புத்தகத்தின் மூலம் எனக்கு ரெம்ப நெருக்கமாயிட்டதால "நண்பர் பிரகாஷ்ராஜ்"ன்னு எழுதியிருக்கேன்) "சொல்லாததும் உண்மை" புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த போது நான் தெரிந்து கொண்ட ஒரு உண்மை "அவரை மாதிரியே நானும் திமிரானவன்"!

பொதுவா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு (நான்,நண்பர் பிரகாஷ்ராஜ்,நண்பர் வினு மாதிரி) யாராவது advice பண்ணி,நாங்க அதை கேக்கலைன்னா எங்களை "திமிர் பிடிச்சவன்னு" சொல்லுவாங்க.அது உண்மைதான்,நாங்க திமிர் பிடிச்சவங்கதான்!

ஆனா எங்களோட அந்த திமிரை, எங்களுக்கு advice பண்றவங்களை தாக்குற ஒரு ஆயுதமா நாங்க பயன்படுத்துறதில்லை,மாறா அவங்க அவங்களோட எண்ணங்களை,குழப்பங்களை,பயங்களை எங்க மேல திணிக்க முயற்சிக்கும் போது அதை தடுக்குற ஒரு கேடயமா பயன்படுத்துறோம்.

என்னை கேட்டா இந்த திமிர் எல்லாருக்கும் இருக்கனும்!

இப்படித்தான் ஒருத்தரு,மக்களுக்கு சிந்திக்கச் சொல்லிகொடுத்தாரு.மக்களும் சிந்திக்க ஆரம்பிச்சு,கேள்விகள் கேக்க ஆரம்பிச்சாங்க.இதை பாத்து கடுப்பான அந்த ஊர் அரசாங்கம் அவரை கூப்பிட்டு இதை எல்லாம் நிறுத்திருன்னு சொன்னது.

ஆனா அவர் ரெம்ப திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

(நாயகன் கமல் மாதிரி "அவங்களை நிறுத்த சொல்,நான் நிறுத்துறேன்" னு Dialague பேசியிருப்பாரோ? :) )

கடுப்பான அரசாங்கம் அவருக்கு "மரண தண்டனை" குடுத்துருச்சு.அப்பவும் "என்னை மன்னிச்சுடுங்கன்னு" ஒரு வார்த்தை சொல்லு,உன்னை விட்டுரோம்ன்னு சொன்னது.

அதுக்கு அவரு மறுபடியும் திமிரா முடியாதுன்னு சொல்லிட்டாரு.

அவர் மட்டும் அன்னைக்கு திமிரா இல்லைன்னா,இன்னைக்கு நாம எல்லாருக்கும் "சாக்ரடீஸ்" ங்ற ஞானி கிடைச்சுருக்கமாட்டாரு.

நண்பர் பிரகாஷ்ராஜ் கூட "சினிமாவுல சம்பாதிச்ச பணத்தை சினிமாவுலேயே போடப் போறேன்னு" சொன்னப்ப.நிறைய பேரு வேண்டாம்ன்னு advice பண்ணினாங்க.அவர் மட்டும் திமிரா கேக்காம இருந்துருக்கலைன்னா, "அழகிய தீயே" "மொழி" மாதிரி நல்ல படங்கள் நமக்கு கிடைச்சுருக்காது.

இப்படி "பெரியார்,பாரதி,காந்தி,பகத்சிங்,கட்டபொம்மன்" ன்னு திமிர் பிடிச்சவங்க பட்டியல் ரெம்ப பெருசு.

இப்போ சொல்லுங்க "நீங்க திமிராவனாரா?"

1 comment:

SurveySan said...

//திமிராவனாரா?"//

typo.

"திமிரானவரா?"