Monday, June 30, 2008

அடுத்த ஆட்டைய போட்டுட்டாங்களா? - கோவை சென்னை இன்டர்சிட்டி ரயில் எர்ணாகுளம் வரை நீட்டிப்பு

ஏற்கனவே கோவை - பெங்களூரு இன்டர்சிட்டி ரயிலை முழுங்கியது போதாது என்று கேரளாவின் அடுத்த ஸ்வாகா.... பேசாமல் தென்னக ரயில்வே என்பதை கேரள ரயில்வே என்று மாற்றி விடலாம். கோயமுத்தூர் எம்.பி, எம்.எல்.ஏ, மேயர், அமைச்சர் பொங்கலூரார் எல்லாம் என்ன புடுங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்று புரியவில்லை.


http://dinamalar.com/pothunewsdetail.asp?News_id=3862&cls=row4&ncat=TN

2 comments:

Bleachingpowder said...

ரொம்ப சரியா சொன்னீங்க...அது ஏன்னே தெரியல கோயமூத்தூர்ல ஏதாவது பிரச்சனைனா எவனும் வாய தொறக்க மாட்டாங்க. ஏனா இங்க ஜாதி வோட்டு கிடைக்காது.
பெங்களுரில் இருந்து கோவைக்கு இருந்த ஒரே ரயிலையும் புடிங்கீடாங்க ஆனா தமிழ் நாட்ல எந்த ஒரு அரசியல்வாதியும் ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை

இப்பவும் கேரளாவில் இருந்து பெங்களுர், சென்னை போற எந்த ரயிலும் கோவையில் நிற்காது ஆனால் கேரளாவில் சின்ன கிராம்மங்களில் கூட நின்றுதான் செல்லும்.

ஐலண்ட் express நம்ம ஊரு வண்டி பேருதான் கண்யாகுமரி to பெங்களுர் இந்த வண்டி தமிழ் நாட்ல வெறும் 7 இடத்தில் தான் நின்று செல்லும் ஆனால் கேரளவில் 28 இடத்தில் நிற்கும். அதுவும் இந்த ரயில் தமிழ் நாட்டு எல்லையான கோவைக்கு வரும் நேரம் இரவு 11 மணி.

இதில் நமக்கு முன்பதிவு செய்ய இரண்டு பெட்டி ஒதுக்குவாங்களானு கூட சந்தேகம் தான். முன்பதிவு செய்ய படாத பெட்டியில் நம்மாளுங்க உள்ள கூட ஏற முடியாது.

இப்போ அடுத்த ஆப்பு தினசரி வண்டியான Coimbatore - Bangalore Kurla Express. இத எர்ணாகுளம் வரை நீட்டிக்க கேரளா எல்லா முயற்சியும் செய்து வருகிறது. அவர்கள் மாநில பத்திரிக்கையும் இதை உறுது படுத்தியுள்ளது. அனேகமாக ஒரிரு மாதங்களில் அறிவிப்பு வரும்.

வழக்கம் போல் சோதனை ஒட்டம் என ஆரம்பித்து பின்னர் அதை நிரந்தரமாகிவிடுவார்கள்.

அதே போல் நிலகிரி ரயிலையும் குருவாயுர் வரை நீட்டிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

கேரளால பொது விசயம்னா எல்லா கட்சிகாரனும் ஒன்ன டெல்லி போய் கும்மி அடிச்சு காரியத்தை சாதிச்சுருவானுக. ஆனா நம்மாளுங்க....தூ...

வசந்தத்தின் தூதுவன் said...

அட பாவிங்களா? அப்போ இனிமே கோயம்புத்தூர் காரங்க எல்லாம் சென்னைக்கு முன்பதிவு செஞ்சு உட்கார்ந்து போகணுமுன்னா முதல்ல எர்ணாகுளம் போயிட்டு அங்கே இருந்து தான் வரணுமா? காலக் கொடுமை.
கோயம்புத்துருக்கே இந்த கதின்னா சேலம், ஈரோடு சொல்லவே வேண்டாம்.
இதுக்கு கோட்டத்தை பிரிக்கேன் கோட்டத்தை பிரிக்கேன்னு ஒரே ராவடி வேற பண்ணிக்கிடிருந்த்தாங்க. கோட்டத்தை நம்மகிட்டே குடுத்துட்டு வண்டியைப் பூராம் திருப்பிட்டான். பத்தாததுக்கு ரயில் பெட்டி தொழிற்சாலையையும் பிசுட்டுப் போய்ட்டான். வாழ்க இந்திய தேசியம். வளர்க மலையாளிகள் மட்டும்.

அப்போ தமிழன்? ஞே......