Thursday, January 31, 2008

தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு

முத்தமிழ்ப் பேரவை விழாவில் முதல்வர் கலைஞர் உரை

சென்னை, ஜன. 30- தைத்திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத் தாண்டு என்று சட்ட ரீதியாகத் தொடங்கி மகிழ்ச்சியோடு கொண்டாடுவோம்; வட மொழிச் சொற்கள் கொண்ட 60 ஆண்டுகள் நம்முடைய காலக் கணிப்புக்குப் பயன் படாது என்று தமிழக முதல் வர் கலைஞர் குறிப்பிட்டார்.சென்னையில் நேற்று நடை பெற்ற முத்தமிழ்ப் பேரவையில் 32 ஆம் ஆண்டு இசை விழா வில் அவர் பேசும்போது இவ் வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:இதை நாங்கள் தமிழ் ஆண் டாக ஒத்துக் கொள்ள முடி யாது என்று சிலர் பத்திரிகை களிலே எழுதி இருக்கிறார்கள்; சிலர் முதல்நாளே கூட மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். சொன்னவர் யாரென்றால் ஒரு மலையாளி என்றால் சரி, ஒரு தெலுங்கர் என்றால் சரி, ஒரு கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றால் சரி, ஒரு இந்திக்காரர் என்றால் சரி, சொன்னவர் ஒரு தமிழரேதான். தமிழர் என்று தான் ஒத்துக் கொள்ள வேண்டும். தமிழ்ப் புலவர்களே கூட இது தமிழ் ஆண்டு ஆகாது. ஏற்கனவே நமக்கு அறுபதாண்டுகள் இருக்கின் றன. அதையே பின் பற்றலாம் என்று எழுதுகின்றவர்கள், சொல்லுகின்றவர்கள் உண்டு.

திராவிடர் கழகத்தாருடைய பிரச்சார அடிப்படையிலே இதை நான் சொல்லவில்லை. தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தின் வாயி லாக எடுத்துச் சொன்ன கருத் துக்களின் அடிப்படையில் நான் சொல்லவில்லை. நமக்கு இருக்கின்ற அறிவு, சிந்தனை அதைக் கொண்டு செய்யக் கூடிய ஆராய்ச்சி இதன் அடிப் படையில சீர்தூக்கிப் பார்த் தால், இந்த 60 ஆண்டுகள் என்ற வடமொழிச் சொற் களைக் கொண்ட இந்த ஆண் டுகள் நம்முடைய வாழ்க் கைக்கு காலக் கணிப்புக்குப் பயன்படுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.அறுபதாண்டுகளில் - பிர பவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிராஜேர்பத்தி, ஆங்கிரச, சிறீ முக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக் கிரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்தீப, சர் வஜித்து விஜய, ஜய, மன்மதன, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி என்று தொடர்ந்து குரோதன, அட்சய என்று முடிகிறது. சரி, இந்த அறுபதாண்டு என்ற கணக்கு எப்படி என்றால் - நார தருக்கும் மகாவிஷ்ணுவிற்கும் பிறந்த பிள்ளைகள் என்று புராணத்திலே இருக்கிறது. நாம் ஒத்துக் கொண்டுதான் தீர வேண்டும். ஏனென்றால் புரா ணத்திலே இருப்பதால் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வேளை சரித்திரத்திலே இருந் தால் ஒத்துக் கொள்ளத் தேவை யில்லை. இருவருக்கும் ஒரு வித மாக விபரீதமான ஆசை ஏற் பட்டது. நாம் இருவரும் ஆணும் பெண்ணுமாக மாறி, ஏன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாதென்று எண் ணினார்கள்! எண்ணியது தெய் வங்கள் அல்லவா? ஆகவே எண்ணியது நிறைவேறியது. அப்படி பிறந்த குழந்தைகள் அறுபது. அந்த அறுபது குழந் தைகள் தான் நான் இப்போது சொன்னேனே, இந்தப் பெய ருக்கு உரிய குழந்தைகள்.சரி, அது வரையில் ஒத்துக் கொள்வோம்.

ஆனால் நம்மு டைய வயதுக் கணக்குக்கு, அல் லது காலக் கணக்குக்கு அந்தக் கதை ஒத்து வருமா? அதைப் பின்பற்ற முடியுமா என்பதை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த மண்டபம் இருக்கின்ற இடம் சாதாரண மான இடமல்ல. சிந்திக்கத் தெரிந்தவர்கள் உள்ள பகுதி இது. எதையும் ஏன், எப்படி என்று தங்களுக்குள்ளாகவே கேட்டு விடை காணக் கூடிய வர்கள் நிறைந்த பகுதி இது. பொதுவாகச் சொன்னால் நிரம்பப் படித்தவர்கள் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியாக இருக் கின்ற காரணத்தால் இங்கி ருந்து அவர்களுக்கு இந்தச் செய்தி போகாவிட்டாலும், காலையிலே அவர்கள் இதை உணர முடியும் என்பதற்காகச் சொல்லுகிறேன்.

இந்த அறுப தாண்டுகள் கணக்கு - காலக் கணக்குக்கு ஒத்து வராது. எப் போது ஒத்து வருமென்றால், மனிதனின் சராசரி வயது, அந்தக் காலத்துத் தமிழனு டைய சராசரி வயது, முப்பது, நாற்பது என்றிருந்தபோது வேண்டுமானால் ஒத்துவரலாம். இப்போது 84 அய்யும் தாண்டி விட்டேன். இப்போது எப்படி அறுபதாண்டுகள் கணக்கு ஒத்து வரமுடியும். என்னைப் பொறுத்த வரையில் நான் பிறந்த ஆண்டு இப்போதுள்ள வருடக் கணக்கின்படி ரக் தாட்சி ஆண்டு, ரக்தாட்சி ஆண்டு அந்த அறுபதில் 58 வது ஆண்டு. ரக்தாட்சி, குரோதன அட்சய என்பதோடு அறுப தாண்டுகள் முடிகிறது. சரி, இன்னொரு பத்து, பதினைந்து ஆண்டுகள் சென்று என்னை தம்பி பாரதிராஜா போன்றவர் கள் பார்த்து நீங்கள் எந்த வருஷம் பிறந்தீர்கள், வயது என்ன என்று கேட்டால், நான் ரக்தாட்சி வருஷம் பிறந்தேன் என்று சொன்னால் அப்படி யென்றால் உங்களுக்கு வயது இரண்டு தான் ஆகிறதா? என்று கேட்பார்கள்.

எனவே ஒழுங்கான கணக்கு, சரியான கணக்கு, வருஷக் கணக்கானாலும் சரி, வயதுக் கணக்கானாலும் சரி, எந்தக் காலக் கணக்கானாலும் சரி, அது கணக்காக இருக்க முடியாது. ஆகவேதான் அந்த வட மொழி என்ற எழுத்தின் மீதுள்ள வெறுப்பால் அல்ல. அந்தக் கணக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால் அதை நாம் விலக்கி வைக்க வேண்டி யிருக்கின்றது. அதனால்தான் தொடர்ச்சியான எண்கள் - நாம் நம்முடைய பண்பாட்டிற் கேற்ப - எப்படி ஆங்கிலேயர் கள் கிறிஸ்து பிறந்த ஆண்டு அதற்குப் பிறகு, அதற்கு முன்பு என்று வைத்திருக்கிறார்களோ, அதைப் போல நமக்கு யார்? நமக்கு யார் கிறிஸ்து? நமக்கு யார் நபி? நமக்கு யார் சிவனோ, பார்வதியோ, சைவர்கள் கணக் கின்படி பார்த்தாலும், அல்லது வேறு எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் திருவள்ளுவர் தான் நமக்கு காலக் கணக்கு.

திருவள்ளுவருக்கு முன், திரு வள்ளுவருக்குப் பின் என்ற இந்தக் கணக்கை எடுத்துத் தான் சுவாமி வேதாசலம் என்ற வடமொழிப் யெரிலே இருந்த பெரும்புலவர் - பல புலவர் களுக்கெல்லாம் வழிகாட்டி யாக இருந்தவர் - இன்று தமிழர்களுடைய தன் மான உணர்வுக்கு அன்றைக்கு வித் திட்டவர் - தண்ணீர் பாய்ச்சி யவர். அந்த சாமி வேதாசலம் - தன்னுடைய பெயரை சாமி வேதாசலம் என்பதை, மறை மலை அடிகளார் என்று மாற் றிக் கொண்டு, தான் மாற்றிக் கொண்டால் மாத்திரம் போதா தென்று ஆண்டுகள் கணக்கை யும் மாற்றி, இனி தமிழனுடைய கலை, கலாச்சாரம் எல்லாம் தமிழிலேயே மாற வேண்டு மென்கின்ற அந்த மாற்றத் தையும் செய்த மாமனிதர்தான், மறைமலை அடிகளார்.அதனால்தான் 1967 இல் ஆட்சிக்கு வந்தவுடன் அண்ணா முதலமைச்சர், நான் பொதுப் பணித்துறை அமைச்சர். அப் போது சைதாப்பேட்டையிலே இருந்த பாலத்திற்கு - அது கட்டப்பட்ட நேரத்தில் அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டதும், நான் எழு திக் கொடுத்த பெயர் மறை மலை அடிகள் பாலம் என்ப தாகும்.

இப்படி நம்முடைய மனதிலே ஆழப் பதிந்திருக்கிற ஒரு சொல். ஒரு பெயர் மறை மலை அடிகள். அவரால் சொல்லப்பட்ட கருத்துத்தான் எடுத்துச் சொல்லப்பட்ட புதை யல்தான் - தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாள் ஆரம்பமா கிறது என்பது. எனவேதான் சொன்னேன். நம்முடைய சாரதா நம்பி ஆரூரான் அதற் காக வருத்தப்படத் தேவை யில்லை. நாம் பேசியிருந்தால் நம்முடைய தாத்தா பெயரை இவ்வளவு நேரம் அவர் சொல் லியிருப்பாரா என்று அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ள லாம் என்பதை மாத்திரம் அவர்களுக்குக் கூறிக் கொள் கிறேன்.- இவ்வாறு முதல்வர் கலை ஞர் அவர்கள் உரையாற்றினார்.

No comments: